2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை.
தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன.
அந்த கோரிக்கைக்கு ஏற்ப ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அ...
“தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்”.. வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
40,944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "கலைஞர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
கருணாநிதி இந்த வாரியத்தை தொடங்கிய போது முதலில் அலுவலர் உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள்.
...
தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்
வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலக்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது , தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் நிலை இருந்தது. இதில் முறைகேடுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உ...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு - பவன் கல்யாண் பற்றிய அவதூறால் "நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு"..
ஆந்திர முதல்வர் சந்திரபாபு , துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் உள்ளிட்டவர்கள் பற்றி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது ஆந்திர போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகை ஸ்ரீரெட்டி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது
இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் நிர்வாகி ராஜூ யாதவ் சார்பில் கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த...
தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
www.onlineppa.tn.gov.in அனுமதியை பெறலாம். 2,500 சதுர அடி வரை உள்ள மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு திட்டம் பொருந்தும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.382.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
"வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும்" -ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெ...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன்
யார் இந்த ஆனந்தன்?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் வழக்கறிஞரான டாக்டர். பி. ஆனந்தன். இவரது தந்தை பெயர் பஞ்சாட்சரம், தாயார் பெயர் சரஸ்வதி. 1974 ஆம் ஆண்டு பட்டாபிராமில் பிறந்தவர் ஆனந்தன். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 1992 முதல் 1997 வரை சட்டம் படித்தவர்.
அப்போது, கல்லூரியின் நூற்றாண்டு விழா சேர்மனாக இருந்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் விழாவினை சிறப்பாக நடத்தினார். அதன் பின்னர் மூத்த வழக்கறிஞர் ராஜா இளங்கோ அவர்களிடம் ஜூனியர் வழக்கறிஞராக ஆறு மாதம் காலம் பணியாற்றி பின்னர், தனி வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கி தற்போது 100க்கும் மேற்பட்ட ஜூனியர் வழக்கறிஞர்கள் கொண்டு வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகிறார்...