திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 3,723 சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 3,723 சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் நடைபெறுகின்றன. சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை...
திருப்பூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !

திருப்பூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த பருவமழையால் பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வரும் தொழிலாளியின் 9 வயது மகள் நெசவாளர் காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துவந்த போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடா்ந்து, மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், திருப்பூர் நெசவாளர் காலனி பள்ளியில் 500-...
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு 26-ந்தேதி தொடக்கம்!

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு 26-ந்தேதி தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது. அவற்றை போக்கும் வகையில் இலவச பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நேரடி பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள 414 பிளாக்குகளில் ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங...
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்த காந்தியின் கொள்ளு பேரன்…!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்த காந்தியின் கொள்ளு பேரன்…!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதி நுழைந்த ராகுல்காந்தியின் நடைப்பயணம், இன்று அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் தொடங்கிய...
ஐபிஎல் 2023 – 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம்!

ஐபிஎல் 2023 – 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம்!

HOME SLIDER, NEWS, sports, விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சூப்பர் கிங்ஸ்: டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) மும்பை இந்தியன்ஸ்: கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ் பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால்...
சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளி...
அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு… வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு… வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  அரசின் தீர்மானங்களை கிடப்பில் போடும் ஆளுநர்களுக்கு... உச்சநீதிமன்றத் தீர்ப்பு   மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு ஆதாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் இன்று விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், 1. பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறுபேரையும் விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். 2. நளினிக்கு விதிக்கப்பட்ட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனைய...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  *ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு* கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நளினி பரோலில் இருந்து வருகிறார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நளினி உட்பட ஆறு பேருக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம், ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி தீர்ப்பு. மேலும் இவர்கள் மீது வேறு வழக்கு இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்று அவர் விடுதலை செய்ய ஆளுநர் ரவி முடிவெடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு பேரும் விடுதலை. அரசு சட்டத...
10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

HOME SLIDER, NEWS, செய்திகள்
10% இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை  திமுக தொடர்ந்து வலியுறுத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார் . பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்ற அமர்வு நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கடந்த 2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டத் திருத்தம் 103 ஆவது அரசியல் சாசன திருத்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த சட்டத் திருதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், செப்டம்பர் 27இல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். நவம்பர் 7 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வி...
11000 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்!

11000 ஊழியர்களை அதிரடியாக நீக்கியது பேஸ்புக்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்' என பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார். பணிநீக...