சமூக அவலத்தை அழுத்தமாக பதிக்கும் தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்
பியூனாக வேலை பார்பவர் மகனோ மகளோ அதே ஆபீசில் ஆபீசாரக பதவிக்கு வரமுடியாது அதற்கு மேலதிகாரிகள் இடம்தராமல் சூழ்ச்சியால் தகுதியிருந்தாலும் தட்டிக்கழித்து விடுவார்கள் என்ற ஒரு வரியையும், அரசு வேலைகளில் சேர திறமையை விட லஞ்சம்தான் முக்கியம் என்ற ஒரு வரியையும் எடுத்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வடிவமைத்திருக்கிற படம்தான் தானாசேர்ந்த கூட்டம்.
அயன் படத்தில் பார்த்த அதே துறுதுறு சூர்யா. ரொம்ப ஜாலியாக வந்து போகிறார். பெரிய அலட்டல் உருட்டல் அடிதடி கலாட்டாக்களை தவிர்த்து மிக திறமையாக தன் கதாபாத்திரத்தை சூர்யா எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு மூவ் நடக்கும்போதும் சூர்யா சிக்கிக் கொண்டார் என நினைக்க வைத்து அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சிவன்.
சூர்யாவுக்கு பொருத்தமான கதையாக தேர்வு செய்து அவரை அதற்கேற்றார்போல வேலைவாங்கி சூர்யா குட்வில் புத்தகத்தில் விக்னேஷ்சிவன் தனக்க...









