புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா். அவருடைய வீசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா். அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது. அமைச்சரும் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்துவிட்டாா். ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா். ஆனால் வ...
5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ...
பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
  அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-   நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது  உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்ப...
பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா  வன்னியர் பொதுசொத்து வாரியம்!

பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  பதட்டமான ராமதாசின் மாமல்லபுர பயண மர்மம் I சாட்டையை சுழற்ற தயாராகிறதா வன்னியர் பொதுசொத்து வாரியம்!   https://youtu.be/9WoYc_NcEWM
துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, politics, உலக செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த தமிழ் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின் துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ரசித்து பார்த்தார்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், தமிழக அரசியல்
துபாயில்  கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை நாளை நேரில் சென்று திறந்து வைக்கிறாா் https://www.youtube.com/watch?v=QxyC5nG5XkI துபாயில்  உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. ...
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” தமிழக அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகர்கள்
”முடிவு எடுத்தால் 2026 முதல்வர்” அரசியல் கட்சிகளை சீண்டிய விஜய் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவார்கள். அதுபோல் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தவும் செய்வார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு, 2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள...
பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

பாஜகவிலிருந்து திடீரென ராஜினாமா செய்த நடிகை குட்டிபத்மினி!

HOME SLIDER, NEWS, politics, தமிழக அரசியல், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சின்னத்திரையில் தயாரிப்பாளருமாகவும் வலம் வருபவர் குட்டி பத்மினி. இவர் சினிமாவை தாண்டி, அரசியலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பிஜேபி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக குட்டி பத்மினி அறிவித்திருக்கிறார் இதுகுறித்து குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த 11 வருடமாக பிஜேபி கட்சியில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன். தற்போது பிஜேபி கட்சியில் இருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள் மும்பையில் அதிகம் இருப்பதால், அரசியலில் ஈடுபட தேவையான நேரம் கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்....
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளி நாட்டுப்பயணமாக இன்று துபாய் செல்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளி நாட்டுப்பயணமாக இன்று துபாய் செல்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. உலகக் கண்காட்சிகள், மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் உல...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதி...