சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: ukraine news

உக்ரைன் தாக்குதலை உடனடியாக நிறுத்துக – ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் தாக்குதலை உடனடியாக நிறுத்துக – ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு உத்தரவிடக் கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய ஜூரிக்கள் எனப்படும் 15 நீதிபதிகளில் 13 பேரின் ஆதரவுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, இது தங்களுக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ளார்  ...
அண்டை நாடுகளில் 30 லட்சம் உக்ரேனியர்கள் தஞ்சம்!

அண்டை நாடுகளில் 30 லட்சம் உக்ரேனியர்கள் தஞ்சம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போருக்கு அஞ்சி உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. சிறிய நகரங்கள், முக்கியமான வர்த்தக பகுதிகள், தலைநகர் கீவ் என மும்முனை தாக்குதலை ரஷ்ய ராணுவம் தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் 15 மாடிகள் கொண்ட குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த மீட்பு படை வீரர்கள், கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதேபோல் பொடில் ஸ்கை, டர்னிட் ஸ்கை உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்புகளை ...
”அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்” தப்பி வந்த மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை மின்னஞ்சல் தகவல்!

”அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்” தப்பி வந்த மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை மின்னஞ்சல் தகவல்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  கார்கிவ் தேசிய மெடிக்கல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம்  தொடங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளதாக உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய நெல்லை மாணவர்   தெரிவித்துள்ளார். கார் கிவ் நகரிலிருந்து லிபியா வந்து சேர தமிழக அரசு அமைத்துள்ள குழு உதவி செய்ததாகவும் அங்கிருந்து, இந்திய தூதரகம் மூலமாக டெல்லிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ள மாணவர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் நடைபெற்ற வந்தது. தற்போது,  ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று  வருகிறது. இதன் காரணமாக இந்திய அரசு  உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவின் விமானப்படை விமானங்கள் மூல...
தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நிகழ்வுகள் தான், சர்வதேச அளவில் அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன. போரில் குடியிருப்பு பகுதிகளும் தாக்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அதேசமயம், ஜார்ஜியன் பாரா மிலிட்டரி திட்டத்தின்படி தன்னார்வலர்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் உக்ரைன் ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இந்த செய்திகளை தொடர்ந்து,...
ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலராக அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில்  நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,0 56 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 40,448 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் வெள்ளி வில...
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பிரச்னையால் ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன. கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது. சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன  ...
Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது. மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது. ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் த...
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவிட்டுள்ளார். அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ...
Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  Ukraine War - உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!   https://youtu.be/vIycmx18WZE    
உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் நன்கொடை வழங்கியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும் சேதப்படுத்தி வருகிறது. ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடனுதவி, ஆயுதங்கள், படை வீரர்கள், இணைய வசதி, உணவு, தண்ணீர் என பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்...