புதன்கிழமை, ஜூலை 22
Shadow

நடிகர்கள்

திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை சின்னமலை தேவாலயத்தில் கிருத்துமஸ் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்விக்கு திமுகவும், டிடிவி தினகரனும் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வென்றதாக குற்றம் சாட்டப்படுவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய்காந்த் அது தோற்றவர்களின் புலம்பல் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தோற்றவர்கள் எதாவது ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தினகரன் வென்றுவிட்டார் அல்லவா அப்படித்தான் சொல்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த வெற்றிடம் டிடிவியால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை பொதுத்தேர்தல் தான் தீர்மானிக்கும். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டு என்பதை அப்போது தான் முடிவு செய்வோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்...
சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!

சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் நடிகைகள்  சொகுசு கார்களை  போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது  வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாஷிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், ந...
அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த்  ரசிகர்களை நாளை சந்திக்கிறார்

அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த் ரசிகர்களை நாளை சந்திக்கிறார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலுக்கு முன்னோட்டமாக ரஜினிகாந்த் நாளை முதல் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினி காந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், நாளை (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப...
சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்த...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த்  கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். சந்திப்பின்  போது அவர் பேச்சிய பேச்சு  பெரும்பரபரப்பையும் பலவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ரஜினி தீபாவளிக்கு அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின. கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற 26 ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள்  தினமும் 1000 ரசிகர்களை சந்தித்து பு...
இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

இந்திய கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் சினிமா ஹீரோக்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக்கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட்  சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் முறையே 4, 5 வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு 98.25 கோடி ரூபாயும், 82.50 கோ...
உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன். அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’ என்கிறார் சிவகார்த்திகேயன். வேலைக்காரன் அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்... இப்படத்தின் மூலமாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஃபகத் பாசில் எப்படி ஒரு காட்சியைப் புரிந்துகொள்கிறார், எப்படி நடிக்கிறார் என்று உன்னிப்பாகக் கற்றுக்கொண்டேன். இம்மாதிரியான படங்களை திரையுலகின் அனுபவப் பாடமாகப் பார்க்கிறேன். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படியொரு முக்கியக் கதாபாத்த...
கிறிஸ்துமஸ் விருந்தாக வரப்போகும் விமலின் மன்னர் வகையறா டீசர்..!

கிறிஸ்துமஸ் விருந்தாக வரப்போகும் விமலின் மன்னர் வகையறா டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை விமல் தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் தயாரித்திருக்கிறார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதபாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2018 ஜ...
பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் ஜன்னல் ஓரம் பட கடன்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அரவிந்த் சாமி-அமலாபால் ஜோடியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் நடிகர் விமல் புகாரால் கேள்விக்குறியதாகி உள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் முருகன் சில ஆண்டுக்கு முன் ஜன்னல் ஓரம் என்ற் படத்தை தயாரித்தார். இதில் பார்த்திபன், விதார்த் இவர்களோடு விமல் நடித்தார். அந்த பட ஷூட்டிங் நேரத்திலும், ரிலீஸ் ஆகும் போதும் விமல் தனது பெயரை வைத்து  கடன் வாங்கி கொடுத்தாராம். ஆண்டுகள் ஓடியும் கடன் அடைக்கப்படவில்லை.  அந்த கடன் வட்டியோடு வளர்ந்து நிற்கிறது. தயாரிப்பாளர் முருகன் இப்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரிக்கிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் ஜோடி நடிக்கின்றனர். அதே நேரம் விமல் சொந்த படமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். வாங்கிய கடன் பட ரிலீஸ் நேரத்தில் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என உணர்ந்து கடன் வாங்கி திருப்பி தராத தயாரிப்பாளர் முருகனி...
2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

2 மாநில தேர்தல் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறதா பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ்  என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்" என விமர்சித்தார். அது முதல் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு எதிராக பல்வேறு     கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பாரதீய ஜனதா குஜராத், மற்றும் இமாசலபிரதேசம்  ஆகிய 2 மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளது.  இது குறித்து  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புள்ள பிரதம மந்திரி, வெற்றிக்கு வாழ்த்துக்கள் ... ஆனால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமரை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்திருந்தார். பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலின் தற்போதையை ந...